விஜய்யின் பிகில் படத்தை ஏன் பார்க்கணும், எதுக்கு பார்க்கணும்?

பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிகில் படம் ஒரு வழியாக நாளை ரிலீஸாக உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள பிகில் படம் நாளை வெளியாக உள்ளது. படத்தின் கதை தங்களுடையது என்று கூறி செல்வா மற்றும் அம்ஜத் மீரான் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பிகில் படத்தை பார்க்க ரசிகர்கள் ஏன் ஆவலாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்க.

அட்லி, விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் பிகில். முன்னதாக அவர்கள் கூட்டணியில் வெளியான தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் ஹிட்டாகின. அதனால் பிகில் படமும் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளதற்காகவே இந்த படத்தை பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும் படத்தில் மாஸுக்கு குறைவிருக்காது என்று நம்பப்படுகிறது.

(அட்லி படம் வெளியானால் இது என் கதை என்று பல இயக்குநர்கள் புகார் தெரிவிப்பார்கள். காரணம் அவர் இன்ஸ்பையர் ஆகி படம் எடுப்பது தான். எந்தெந்த படங்களில் இருந்து இன்ஸ்பையர் ஆகி பிகில் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.) அட்லியின் திறமை மீது விஜய் ரசிகர்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதால் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என்றால் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்துள்ளது.

வில்லு படத்தை அடுத்து விஜய்யும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். கோலிவுட்டின் முன்னணி நடிகை, அதுவும் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரங்களில் நடிக்கும் நயனுக்கு பிகில் படத்தில் என்ன வேலை என்பதை அறிய பலர் காத்திருக்கிறார்கள்.

விஜய் ராயப்பன், மைக்கேல், பிகில் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ராயப்பன் கதாபாத்திரத்திற்காக பெரிதும் மெனக்கெட்டாராம் விஜய். அதனாலேயே படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் துடிக்கிறார்கள். ஒவ்வொரு கெட்டப்புக்கும் வித்தியாசம் காட்டுபவர் விஜய் அண்ணா என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!