புதிய அவதாரம் எடுக்கும் அனுஷ்கா சர்மா

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா சர்மா, புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து புது படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்து வருகிறார். தற்போது அனுஷ்கா சர்மா சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளார்.

பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடிப்பதுடன், அதை தயாரிக்கவும் செய்கிறார். ‘உங்கள் நடிப்புக்கேற்ற கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் தான், நீங்களே படம் தயாரித்து, நடிக்கிறீர்களா’ என்ற கேள்வியை மறுக்கிறார். ”படங்களில் நடிப்பதை இப்போது குறைத்து விட்டேன். சினிமாவில் எல்லா துறையிலும் கால்பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக படம் தயாரிக்கிறேன்; அவ்வளவு தான்’ என்று கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!