அடுத்தப்படத்தில் வெற்றிமாறனுக்கு வந்த சோதனை, கதையை இப்படி மாற்றிவிட்டாரா?

வெற்றிமாறன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவருடைய படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அசுரன் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்து சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படம் கத்தார் நாட்டில் நடக்கவிருந்தது.

இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்களின் கஷ்டங்களையும், வாழ்க்கை முறைகளையும் அப்படம் காட்டவிருந்ததாம்.

ஆனால், தற்போது படப்பிடிப்பு கிளம்பும் நேரத்தில் கொரோனா வைரஸ் பரவுவது எல்லோருக்கும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிற்க, தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழு இருந்து வந்துள்ளது.

இந்த நேரத்தில் வெற்றிமாறன் தற்போது படத்தின் கதையையே கொஞ்சம் மாற்றி இங்கு சில காட்சிகளை எடுக்கவுள்ளதாக முடிவு செய்துள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!