விஜய்க்கு எதிராக ஒருவரையும் திருப்ப முடியாது, சென்சேஷன் இயக்குனர் அதிரடி கருத்து

தளபதி விஜய்க்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் தன் படங்கள் தாண்டி வெளியிலும் மக்களுக்காக ஒரு சில விஷ்யாங்களில் குரல் கொடுத்துள்ளார்.

இதனால், விஜய்க்கு மேலும் மேலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது, இந்நிலையில் விஜய் ஏதாவது அரசுக்கு எதிராக கருத்து சொன்னால் அவரை ஜோசப் விஜய் என்று சொல்வார்கள்.

அதாவது மதம் சார்ந்த அவரை தாக்கி ஒடுக்க நினைப்பார்கள், இதுக்குறித்து குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற சென்சேஷன் படைப்புக்களை இயக்கிய ராஜுமுருகன் பதில் கூறியுள்ளார்.

இதில் அவர் கூறுகையில் ‘இது மக்கள் விரும்புவது இல்லை, அரசியல் செய்வோர்களின் வேலை.

என்ன தான் நீங்கள் அவரை ஜோசப் விஜய் என்று பிரித்தாலும், அவரை பார்க்க தான் திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

அவருக்கு எதிராக இங்கு ஒருவரை கூட திருப்ப முடியாது’ என்று அதிரடியாக பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!