ஆசியாவின் கவர்ச்சி மங்கையாக பிரபல நடிகை தேர்வு..!!!


இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டிலும் இவர் தனி இடம் பிடித்திருக்கிறார். இப்போது ஆசியாவின் கவர்ச்சி மங்கை ஆகிஇருக்கிறார்.

லண்டனில் உள்ள ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவில் உள்ள கவர்ச்சியான 50 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் தீபிகா படுகோனே. இந்த முறை அவரை பின் தள்ளிவிட்டு பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்திருக்கிறார். டி.வி. நடிகை நித்யா சர்மாவுக்கு 2-வது இடமும், தீபிகாவுக்கு 3-வது இடமும் கிடைத்திருக்கிறது.


ஆலியாபட் 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். 5-வது இடம் பாகிஸ்தான் நடிகை மாஹிரா கானுக்கு கிடைத்துள்ளது.

இது பற்றி கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, “ஆசியாவின் கவர்ச்சி மங்கையாக தேர்ந்து எடுக்கப்பட்டது. மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி”என்று தெரிவித்துள்ளார். -Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!