நான் அரசியலுக்கு வர மாட்டேன், என்னை வேதனைக்கு உள்ளாக வேண்டாம்..! – மீண்டும் அறிக்கையை வெளியிட்ட நடிகர் ரஜினி..

சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அதன்பின் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஒரு சில செயல்களில் ஈடுபட கூடாது என வீடு திரும்பினார் ரஜினி.

அதனை தொடர்ந்து தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை எனவும், அதற்கான காரணங்கள் குறித்தும் கூறி ஒரு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ரஜினி.

இந்நிலையில் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரின் ரசிகர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தற்போது ரஜினி “நான் அரசியலுக்கு வர முடியவில்லை, என்பதற்கான காரணங்களை ஏற்கனவே கூறிவிட்டேன், நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று இது போன்று நிகழ்வுகளில் நடந்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக வேண்டாம்” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!