தமிழ் திரையுலகில் சிறு வயதில் இருந்தே நடித்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கலையணி ப்ரியதர்ஷன் மாற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு இணைந்து நடிக்க வுள்ளதாக சில தகவல்கள் கசிந்து வருகிறது. இதற்கு முன்பே சேரன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஒரு கதை கூறி இருப்பதாகவும். மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல் வெளியானது.
மேலும் அந்த படத்தை சேரன் அவர்கள் பிரம்மாண்ட முறையில் எடுக்க இருப்பதுவும் அப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சிம்பு இணைந்து நடிக்கப்போவதாகவும் தகவல் தற்போது கசிந்துள்ளது.
இதற்கு முன்பே இவர்கள் இருவரும் மனிரத்னத்தின் இயக்கத்தில் இணைந்து நடித்திருந்தது கூறிப்பிடத்தக்து.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!