வீதியில் ட்ராபிக் அதிகமானதால் பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ் பெண்ணாக இருந்தாலும் மலையாள ப்ரேமம் படம் மூலம் சினிமா துறைக்கு வந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் அந்த படம் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை சம்பாரித்தார். இவர் சேகர் கம்முலா இயக்கிய பிடா படத்தில் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்த படம் ஹிட்டடித்ததை அடுத்து நானிக்கு ஜோடியாக எம்சிஏ படத்தில் நடித்தார்.

மேலும், இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கரு என்ற படத்தில் நடித்தார் சாய் பல்லவி. இப்படத்தின் கதை ஒரு பெண்ணை மையப்படுத்தியது என்பதால் அவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு நடித்துமுடித்துள்ளார்.


இந்த படத்தை தெலுங்கில் கணம் என்ற பெயரில் எடுத்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது, விழாவிற்காக சாய் பல்லவி காரில் சென்றுள்ளார்.

அப்போது ட்ராபிக் ஜாம் அதிகமாக இருந்ததால், காரில் இருந்து இறங்கி உதவியாளர் ஒருவரை அழைத்து பைக்கில் விழா நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி