ஸ்ரீதேவியின் மகளை கேவலமாக பேசியவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்த அன்ஷுலா..!!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார், அங்கு இரவு 11.30 மணியளவில் குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில், மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் ஸ்ரீதேவி.


இந்த நிலையில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஸ்ரீதேவியின் இறப்பிற்காக அவர்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி தற்போது தான் அவரின் முதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகம். இந்த நிலையில், ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் முதல் மனைவி மகள் அன்ஷுலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜான்வி பற்றி தவறாக சில ரசிகர்கள் பேசியுள்ளார்கள்.


அதை பார்த்து கோபப்பட்ட அன்ஷுலா இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், அசிங்கமா வார்த்தைகளால் பேசாதீர்கள், அதிலும் என் தங்கைகளை பற்றி பேசினார் அது எனக்கு பிடிக்காது. அந்த விஷயங்களை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அவ்வாறு நீங்கள் செய்த கமெண்ட்டை நான் டெலீட் செய்துவிட்டேன். என்று கூறியுள்ளார் அன்ஷுலா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி