40 இல்ல.. 400 கோடி கேட்டேன், இந்த ஒரு சீனுக்கு மட்டும் 100 கோடி! நக்கலாக பேசிய மிஸ்கின்

தான் இயக்கிவந்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து மிஸ்கின் தற்போது திடீரென வெளியேறிவுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடப்பட்ட பட்ஜெட்டை தாண்டி 40 கோடி ருபாய் அதிகம் மிஸ்கின் கேட்டதாகவும், அதை தயாரிப்பாளரான விஷால் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள படத்தினை விஷாலே இயக்கவுள்ளார். இதை அவரும் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இது பற்றி மிஸ்கினிடம் கேட்டதற்கு “40 கோடி இல்ல.. 400 கோடி கேட்டேன். 100 கோடியில் பாதி படத்தை முடித்துவிட்டேன். மீதி படத்திற்கு 100 கோடி வேண்டும். கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் satellite-ல் இருந்து குதிப்பது போன்ற காட்சிக்கு மட்டும் 100 கோடி செலவு. அதனால் மொத்தமாக 400 கோடி கேட்டேன்” என நக்கலாக பதில் கூறியுள்ளார்.

இந்த தகவல் கோலிவுட்டையே அதிர்ச்சியாக்கியுள்ளது, ஏனெனில் இதற்கு முன் இப்படியெல்லாம் நடந்ததா? என்றால் ஆச்சரியம் தான்.

இப்படித்தான் பாலா எடுத்த வர்மா படம் பிடிக்கவில்லை என்று, அப்படியே புது இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா எடுத்து ஒரு புதுமையை சமீபத்தில் நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!