இதெல்லாம் எப்படி நம்புறது..!! சர்ச்சையை ஏற்படுத்திய அரவிந்த்சாமி..!!


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடவுள்ளார் என்ற தகவல் வந்ததிலிருந்து பரபரப்பு பற்றி எறிந்துகொண்டிருகிறது

விஷாலை முன்மொழிந்து கையொப்பமிட்ட 10 நபர்களில் இரண்டு நபர்கள் நாங்கள் கையெழுத்தே போடவில்லை. என்று தேர்தல் ஆணையத்திடம் கடிதம் மூலம் மறுப்பு தெரிவித்ததால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காரணம் மறுப்பு தெரிவித்த இரண்டு நபர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களை பிரபல அரசியல் கட்சி மிரட்டியதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளார்கள் என விஷால் தன்னுடயை வாதத்தை முன் வைத்தார். ஆனாலும், விஷாலின் வேட்புமனு ஏற்க்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் அரவிந்த்சாமி நறுக் சுறுக்கென தன்னுடையை இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


1. விஷால் போன்ற ஒருவர் தனக்கு ஆதரவாக பத்து நபர்களை அழைத்து வருவது என்ன அவ்வளவு கடினமான விஷயமா..?

2. கையெழுத்தை போட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் நான் அந்த கையெழுத்தை போடவில்லை என்று அவர்கள் சொன்னதையும், அதனை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதையும் நம்பமுடியவில்லை. #gamespeopleplay.

இவ்வாறு விஷால் விவாகரம் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துவைத்துள்ளார் நடிகர் அரவிந்த்சாமி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!