ஏ.ஆர். ரகுமான் அவர்கள் எப்போதும் தனது வேலையில் மட்டும் கவனம் காட்டக் கூடியவர்.
இப்போது இவர் குறித்து சினிமாவை தாண்டி ஒரு செய்தி வந்துள்ளது.
அதாவது இங்கிலாந்தின் லிப்ரா செல்போன் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்து கொடுக்க ஒப்பந்தமாகியிருக்கிறது.
செல்போன் நிறுவனத்திற்கு இசையமைத்ததற்கு ரூ. 3.47 கோடி ஊதியம் வாங்கியுள்ளார்.
அதற்கு அவர் வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறையினரால் வழக்கு தொடரப்பட்டது.
தற்போது அந்த வழக்கு சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!