தனுஷ் மட்டும் அல்ல சிம்பு ரசிகாஸும் பொங்கலுக்காக மரண வெயிட்டிங்: ஏன் தெரியுமா?

மாநாடு அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மாநாடு படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு படத்தை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, மாநாடு படத்தில் நடிப்பவர்கள், படப்பிடிப்பு துவங்கும் தேதி ஆகியவை பொங்கல் அன்று அறிவிக்கப்படும் என்று சுரேஷ் காமாட்சி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை
மாநாடு படப்பிடிப்பு ஜனவரி 20ம் தேதி கோவையில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 16ம் தேதி தனுஷின் பட்டாஸ் படம் ரிலீஸாக உள்ளதால் அவர் ரசிகர்கள் பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மாநாடு அப்டேட் வரும் என்பதால் சிம்பு ரசிகர்கள் பொங்கலை எதிர்பார்த்துள்ளனர். தற்போது தலைப்பை மீண்டும் படித்துப் பார்க்கவும்.

பிரச்சனை
மாநாடு படப்பிடிப்பு முன்பே துவங்க வேண்டியது. கொடுத்த தேதியில் சிம்பு நடிக்க வரவில்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்குவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதையடுத்து வெங்கட் பிரபுவும் படத்தில் இருந்து விலகினார். மாநாடு கைவிடப்பட்டுவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட உஷா ராஜேந்தர் தன் மகன் சிம்பு சரியான நேரத்திற்கு வந்து நல்லபடியாக நடித்துக் கொடுப்பார் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்தே மாநாடு படத்தின் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
முன்னதாகவும் சிம்பு தன் வெயிட்டை குறைத்து ஒல்லியானார். ஆனால் மாநாடு படம் பிரச்சனையில் சிக்கிய நேரத்தில் மீண்டும் வெயிட் போட்டுவிட்டார். தற்போது மறுபடியும் முதலில் இருந்து ஒர்க்அவுட் செய்து எடையை குறைத்து வருகிறார். அவர் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள், தலைவன் வந்துட்டான்னு சொல்லு பழையபடி திரும்பி வந்துட்டான்னு சொல்லு என்று கூறி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!