நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் – சித்தார்த்

தன்னைப் போல் வாய் பேசுபவர்கள் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் சமூக பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திலும் சித்தார்த் கலந்து கொண்டார். இதனால் அவர் விரைவில் அரசியலில் ஈடுபடப்போகிறார் என பேச்சு எழுந்தது.

இதுகுறித்து சித்தார்த் கூறியதாவது:- அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னைப் போல் வாய் பேசுபவர்கள் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். அரசியலில் ஈடுபடுவதற்கு ஒரு சாணக்கியத்தனம் வேண்டும். எதை, எப்போது, எப்படி பேச வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். எனக்கு உண்மையை பேச தெரியும். அதை தான் நான் பேசுகிறேன்.

எனது நாட்டை பற்றி இழிவாக பேசி, அதில் இருந்து ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படக்கூடாது என்பதற்காகவே சில முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுகிறேன். இந்த தருணத்தில் நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியது கட்டாயம். சமூக வலைதளங்களில் நான் போடும் பதிவுகள் எனது கருத்துகள் மட்டுமே. அதைத்தாண்டி வேறு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!