இது ஒருவன் சோற்றில் மண்ணை போடுவது: நடிகர் கோபம்

ஹீரோ படம்
.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹீரோ படம் பலருக்கும் பிடித்துள்ளது. இருப்பினும் படத்தை பார்த்துவிட்டு அது சரியில்லை, இது சரியில்லை என்று விமர்சித்தவர்களும் உண்டு. அப்படி ஹீரோவை விமர்சித்தவர்களை பார்த்த கலை இயக்குநரும், நடிகருமான கிரணால் சும்மா இருக்க முடியவில்லை. இதையடுத்து அவர் தன் மனதில் பட்டதை ட்விட்டரில் கொட்டிவிட்டார்.

ஹீரோவுக்கு நன்றி
ரஃப் நோட்டில தான் மொத்த கிரியேட்டிவும் இருக்கும். என் அம்மா என் விருப்பத்தை அப்படி தான் அடையாளம் கண்டார். என் பிள்ளைகளிடம் அப்படி தான் நானும் காண்கிறேன். ஹீரோ படக்குழுவுக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் கிரண் . அவரின் ட்வீட்டை பார்த்த மித்ரன் நன்றி தெரிவித்து கமெண்ட் போட்டுள்ளார்.

விமர்சனம்
70% நல்ல படமாக இருந்தும்.. மனசாட்சியே இல்லாமல் விமர்சனம் என்ற பெயரால் படுகுழியில் தள்ளும் கொடுமை தமிழ் திரைப்படங்களிலே அதிகமாக காணப்படுகிறது.. உலகிலே சுலபமானாது விமர்சனம் செய்வது. இது ஒரு வகையில் ஒருவன் சோற்றில் மண்ணை போடுவது போல தான் என்று கோபப்பட்டுள்ளார் கிரண். அவர் சொல்வதும் சரி தான். தற்போது படம் பார்க்கச் செல்பவர்கள் அதை ரசிக்காமல் விமர்சனம் செய்வதிலேயே குறியாக உள்ளனர்.

சினிமா
விமர்சன விரும்பிகளே.. உங்களால் ஒரு படம் ஓட வில்லை என்றாலும் பரவாயில்லை.. ஆனால் சினிமாவை அழிவை நோக்கி கொண்டு செல்லாதீர்கள் ����.சினிமாவை தவிர பிழைக்க வழி இல்லாமல் வாழ்பவர்கள் இங்கே ஏராளம் என்று தெரிவித்துள்ளார் கிரண். அவரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் குறை சொல்லாமல் ஒழுங்காக படம் எடுக்குமாறு கூற அதற்கு அவரோ, ஒருவனின் கற்பனை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், ஒதுக்கி வையுங்கள் இல்லை நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள்.. அவன் வயிற்றில் அடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.. அது தர்மமும் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!