அவரை பார்க்கும்போதெல்லாம் அந்த கேள்வியை அதிகமாக கேட்டிருக்கிறேன் – திரிஷா

பட விழாவில் கலந்துக் கொண்ட நடிகை திரிஷா, அவரை பார்க்கும் போதெல்லாம் அந்த கேள்வியை அதிகமாக கேட்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் திரிஷா இந்தியிலும் நுழைந்து தனது திறமையை காட்டினார். இதேபோல கடந்த ஆண்டு மலையாளத்தில் முதன் முறையாக ‘ஹே ஜூட்’ என்கிற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது ஜீத்து ஜோசப் – மோகன்லால் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘ராம்’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் துவக்கவிழா பூஜை கொச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய திரிஷா, “நான் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அங்கே மோகன்லாலை பார்க்கும்போதெல்லாம் எப்போது நாம் இணைந்து நடிக்கப் போகிறோம் என்கிற கேள்வியையே அதிகமாக கேட்டிருக்கிறேன். இன்று என்னுடைய அந்த கனவு நனவாகியுள்ளது. மோகன்லால், ஜீத்து ஜோசப் என்கிற மிக அருமையான கூட்டணியில் நானும் இணைந்துள்ளது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!