பிரபல நடிகர் மீது ஈர்ப்பு – சுனைனா

தமிழில் காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்த சுனைனா, பிரபல நடிகர் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.

சமீபகாலமாக நடிகைகள் தங்களை ஈர்த்த ஆண்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். பரதேசி, பேராண்மை, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாய் தன்சிகா, நடிகர் சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக கூறினார். அவரை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா தனக்கு நடிகர் விஜய் சேதுபதி மீது ஈர்ப்பு என கூறி அதிர வைத்தார்.

இந்நிலையில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சுனைனா ஈர்ப்பு குறித்து தெரிவித்திருப்பது ரசிகர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்தவர் சுனைனா. ட்விட்டரில், ரசிகர் ஒருவர் சினிமாத்துறையில் உங்களின் முதல் ஈர்ப்பு யார்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுனைனா, பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது தான் முதலில் ஈர்ப்பு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கோய் மில் கயா படம் ரிலீஸான போது அந்தப் படம் தனது வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கு வகித்தது என்றும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!