No ஹீரோயிசம்.. போலிஸ் கான்ஸ்டபிளாக மாறும் அதர்வா

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர். அவரும் தொடர்ந்து வித்யாசமான ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் பெரிய ஹிட் கொடுக்க திணறுகிறார்.

100 படத்தில் போலீசாக நடித்த அவர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆனால் இந்த முறை ஹீரோயிசம் இல்லாத சாதராண கான்ஸ்டபிள் வேடத்தில் தான் நடிக்கிறார் அவர்.

புதுமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறதாம். பெரும்பாலான காட்சிகள் சென்னையில் தான் எடுக்கவுள்ளோம் என இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரு பகுதிக்காக மட்டும் தென் தமிழகத்தில் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!