ஒரே மாதத்தில் கைதி படத்தை இணையத்தில் வெளியிட்டது ஏன்?- தயாரிப்பாளர் விளக்கம்

கைதி படம் வெளியாகி ஒரு மாதமே ஆன நிலையில், அதனை இணையத்தில் வெளியிட்டது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது. இருப்பினும் விறுவிறுப்பான திரைக்கதையால் இப்படம் வெற்றி பெற்றது. கார்த்தி நடித்த திரைப்படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் கைதி ஆகும். இப்படம் வெளியாகி ஒருமாதம் ஆன நிலையில், தற்போது இணையத்தில் கைதி படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இணையத்தில் படத்தை வெளியிடுவது தொடர்ந்தால், திரையரங்குகளில் சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று கேட்கிறீர்கள்? ஆம்! ஆனால், மூன்றாவது வாரத்திலிருந்து பைரசி மற்றும் குறைவான வசூல் ஆகிய பிரச்சனைகளும் உள்ளன, ஆகையால் தயாரிப்பாளர்கள் இதன் மூலம் மட்டுமே அவற்றை ஈடுசெய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!