மீடியா இந்த கேள்வியை கேட்கக் கூடாது: ஓவியா அதிரடி

தன்னிடம் அரசியல் குறித்து எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று ஓவியா ட்வீட் செய்துள்ளார்.

தமிழில் களவாணி, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஓவியா. என்ன தான் அப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், கோலிவுட்டில் அவரால் முன்னணி ஹீரோயினாக மாற முடியவில்லை.

பிறகு பட வாய்ப்புக்காக, ஓவியா பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். அதில் அவர் தனது உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் அவரை நேசிக்க ஆரம்பித்தனர். அந்நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.

நிகழ்ச்சி முடிந்த கையோடு ஓவியாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. இன்றும் சமூக வலைதளங்களில் அவரது ஆர்மி பேஜ் ஆக்டிவாக தான் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓவியாவிடம், ‘ரஜினி, கமல் அரசியல் குறித்து உங்கள் பார்வை என்னவென்று நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஓவியா, அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.

அந்த கேள்விக்கான விடையை, ஓவியா தற்போது ட்விட்டரில் கூறியுள்ளார். அந்த ட்வீட்டில், ‘அரசியல் சார்பற்ற நடிகர், நடிகர்களிடம் அரசியல் பற்றி மீடியா கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற கேள்விகளை பொது மக்களிடம் கேட்டால், எதிர்பாராத பதில் கிடைக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!