ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த விஷால்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தன்னுடைய ஆக்‌ஷன் திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. சுந்தர்.சி இயக்கி இருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் துருக்கியில் படமாக்கப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்திற்கு டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரித்துள்ளார்.

இப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு விஷால் கோரிக்கை வைத்துள்ளார். ஆக்‌ஷன் திரைப்படம் வெளியாவதையொட்டி பேனர்கள், கொடிகளை வைக்க வேண்டாம். இதற்கு ஆகும் செலவுகளை ஏழை, எளியோர்களுக்கு உதவுமாறு விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அயோக்யா படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால் – சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!