போதை பழக்கத்தை விளையாட்டாக ஆரம்பித்து, சுயநினைவை இழக்கின்றனர் – விஜய் ஆண்டனி வருத்தம்

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்திருந்தார். கடந்த மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை அண்ணா நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, ரம்யா பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, “இளைஞர்கள் போதை பழக்கத்தை விளையாட்டாக ஆரம்பித்து, கடைசியில் சுயநினைவை இழக்கும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர். எனவே இதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் ” என்றார்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!