நாலுவிதமா பேசும் நெட்டிசன்ஸ்: கொடுத்து வைத்தவள்னு போட்டோ வெளியிட்ட பூஜா குமார்

நடிகை பூஜா குமார் தான் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸன் ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

கமல் குடும்ப புகைப்படத்தில் பூஜா
காதல் ரோஜாவே படம் மூலம் கோலிவுட் வந்த பூஜா குமார் 10 ஆண்டுகள் கழித்து கமல் ஹாஸனின் விஸ்வரூபம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் விஸ்வரூபம் 2 படத்திலும் நடித்தார். இந்நிலையில் கமல் ஹாஸனின் 65வது பிறந்தநாள் அன்று வெளியான அவரின் குடும்ப புகைப்படத்தில் பூஜா குமார் இருந்ததை பார்த்து பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி, கமலுடன் பூஜா
இரண்டு படங்களில் சேர்ந்து நடித்த பூஜா எப்படி குடும்ப புகைப்படத்தில் இடம்பிடித்திருந்தார் என்று சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பூஜா ரஜினிகாந்த் மற்றும் கமலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு லெஜண்டுகளிடம் இருந்து கற்றுக் கொள்ள நான் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் கொடுத்து வைத்துள்ளது என்று பெருமையாக தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
பூஜா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, ரஜினி, கமலுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் தான். அவர்களை சேர்ந்து பார்த்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. நீங்கள் நடித்து வரும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். இது போன்று அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஒரு மாதிரியாக பேசும் நெட்டிசன்ஸ்
சேட்டைக்கார நெட்டிசன்களோ, ரஜினி தள்ளி நிற்கிறார், கமலுடன் ஏன் நெருக்கமாக நிற்கிறீர்கள். இதன் மூலம் ஒரு விஷயம் தெரிகிறது என்று வேறு மாதிரியாக பேசியுள்ளனர். வேலை இல்லாத, முகம் தெரியாத நபர்கள் பிரபலங்களை விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது. அதனால் அதை பல பிரபலங்கள் கண்டுகொள்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாஸன் ஒருவரை தன் குடும்ப புகைப்படத்தில் நிற்க அனுமதிக்கிறார் என்றால் அது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!