லதா பாண்டி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீ திவ்யா தற்போது படங்கள் ஏதும் இல்லாமல் பொழுதை கழித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இப்படத்தின் லதா பாண்டியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர். இவரது டயலாக் ஒவ்வொன்றும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

அதாவது, பொண்ணு ரெடியாகி 3 மாசம் ஆச்சு, இந்த மாதிரி லவ் லெட்டர் கொடுத்தா டீச்சருக்கு பிடிக்காது, கிரீட்டிங்ஸ் கார்டு வாங்கி சாக்லேட் வச்சு கொடுத்தா தான் கொடுப்பேன், ஊதா கலரு ரிப்பன் எல்லாமே டாப் டக்கர் வசனமாக அமைந்தது.

இப்படத்தில் வரும் காதல் காட்சிகளுக்காகவே இப்படத்தைக் காண இளம் ரசிகர்கள் இப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாகவே இருந்தது. இப்படத்தின் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராகவே வலம் வந்தார். இவ்வளவு ஏன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றுக் கொடுத்தது. இப்படத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பைத் தொடர்ந்து, மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து காக்கிச் சட்டை படத்தில் நடித்தார். ஆனால், இந்தப் படத்திற்கு போதுமான வரவேற்பும் கிடைக்கவில்லை. காதல் காட்சியும் அமையவில்லை.

எனினும், இஞ்சி இடுப்பழகி, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, ரெமோ, காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ தொற, ஒத்தைக்கு ஒத்தை என்று பல படங்களில் நடித்திருந்தாலும் எந்த படமுமே போதுமான வரவேற்பு கொடுக்கவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் போன்று அவர் நடித்த எந்த படத்திற்கும் கிடைக்கவில்லை.

இதனால், தமிழில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி, தமிழில் மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பார்த்தால், அவர் அறிமுகமான தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு அமையவேயில்லை. தெலுங்கில் வந்த ஹனுமன் ஜங்சன் என்ற படத்தின் மூலம்தான் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீ திவ்யா சினிமாவில் அறிமுகமானார்.

ஸ்ரீ திவ்யா இதுவரை நடித்த படங்களில் பெரும்பாலும் ஹோம்லி லுக்கிலே வலம் வந்துள்ளார். கவர்ச்சியில் அவர் இறங்கவில்லை. இதன் காரணமாக, அவருக்கு சினிமா வாய்ப்பு அமையவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேலை அவர் கவர்ச்சிக்கு ஓகே சொன்னால், மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைத் தவிர அவர் எந்த மொழியிலும் படம் நடிக்கவில்லை. தற்போது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!