தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிப்பு: சுந்தர் ஆறுமுகம்!

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வரை வசூல் குவித்துள்ளது என்று தொழிலதிபரும், தயாரிப்பாளருமான சுந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில். உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது. இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்துள்ளது என்று தொழிலதிபரும், ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளருமான சுந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பிகில் படத்தின் திரையரங்க உரிமையை நேரடியாக வாங்கி அதனை விநியோகஸ்தர்களுக்கு விற்றேன். ஆனால், அவர்களுக்கு லாபம் பெரிதாக இருக்காது என்று எண்ணினேன். உரிமையை விற்றதோடு எனது வேலை முடிந்தது. இப்படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டாலும் அது அவர்களுக்குத்தான், லாபம் ஏற்பட்டாலும் அது அவர்களுக்குத்தான்.

எனினும், பிகில் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை ஈட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் 40 நாட்கள் நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதில், விஜய், விஜய் சேதுபதி ஆகியோரது சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2020 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு அன்று திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!