சூரியின் புதிய ஹோட்டலை சிவகார்த்திகேயன் திறந்து வைத்துள்ளார்.
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக நமக்கு விருந்து வைத்து வரும் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளித்து வருகிறார்.
சூரி கடந்த 2017ம் ஆண்டு ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். அந்த உணவிற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளதால் சூரி மிக்க மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்த நிலையில் தற்போது சூரி தனது உணவக கிளைகளைப் பெருக்க வேண்டி “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்று இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவஙகியுள்ளார்.
இந்த புதிய உணவகங்களைச் சூரியின் நண்பரான சிவகார்த்திகேயன் இன்று (நவம்பர் 1) குத்து விளக்கேற்றி திறந்து வைத்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதை கண்ட சிலர், ‘என்னது சூரி ஹோட்டல் நடத்தி வருகிறாரா? எங்களுக்கு தெரியவே தெரியாதே’ என்று கூறியுள்ளனர். மற்றொரு பக்கம், ‘இந்த 3 கிளை இன்னும் பல மடங்குகள் ஆகட்டும்’ என்று வாழ்த்தும் கூறியுள்ளனர்.
சூரியை சிவகாரத்திகேயன் அண்ணன் என்று பெயருக்கு அழைக்கவில்லை. நிஜத்திலும் அவர்கள் அண்ணன் தம்பியாகத் தான் பழகுகிறார்கள். இந்நிலையில் தான் தம்பியை வைத்து தனது ஹோட்டல்களை திறக்க வைத்துள்ளார் சூரி.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!