வில்லனாக களமிறங்கும் வெங்கட்பிரபு

பிரபல இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு, நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகும் ’லாக்கப்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், சில படங்களில் நாயகனாகவும் நடித்து வந்தவர் நிதின் சத்யா. கடந்த ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான ‘ஜருகண்டி’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது தனது இரண்டாம் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இந்த புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார்.

‘ஷ்வேத் நிதின் சத்யா’ நிறுவனம் மூலம் நிதின் சத்யா தயாரித்து வருகிறார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘லாக்கப்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அரோல் கரோலி இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!