முதலில் விஜய், அடுத்து ரஜினி: நீங்க நடத்துங்க கார்த்தி

கார்த்தி நடித்து வரும் சுல்தான் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படத்துடன் சேர்ந்து வந்த கார்த்தியின் கைதி படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிகிலை விட குறைவான பட்ஜெட்டில் வெளியானாலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் நல்ல கதைகளைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை அடிப்படியாகக் கொண்ட கைதி படத்தில் கார்த்தி அசத்தலாக நடித்துள்ளார். அதே தயாரிப்பு நிறுவனம் சார்பில், கார்த்தியின் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

முதலில் சுல்தான் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் சில தகராறு ஏற்பட்டதால் தாமதமானது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுல்தான் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொங்கல் திருநாளில் ரஜினியின் ’தர்பார்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த படம் ரிலீஸானாலும் எதன் கதை பிடிக்கிறதோ அதை ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள். அந்த தைரியத்தில் தான் கார்த்தியின் படத்தை தர்பாருடன் சேர்த்து ரிலீஸ் செய்யப் போகிறார்கள் போன்று.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!