இயக்குநர்களை கதறவிடுபவரா சிம்பு, யார் சொன்னது?: இதை பாருங்க

தான் நடிக்கும் படங்களின் இயக்குநரை கதறவிடுவார் சிம்பு என்பவர்களை வியக்க வைத்துள்ளார் இயக்குநர் ஜமீல்.

சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளரும் கதறியதை பார்த்து கோலிவுட்டே பாவப்பட்டது. சிம்பு தன்னை வைத்து படம் எடுப்பவர்களை கதற விடுவார் என்று பேசப்பட்டது.

இதையடுத்து தான் அவர் சமத்துப் பிள்ளையாக மாறி மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். சிம்பு நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்து மணியின் மனம் கவர்ந்தார்.

அதன் பிறகு சிம்பு மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவர் ஷூட்டிங்கிற்கு வராததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவரையே அந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கலந்து கொண்ட சிம்புவின் அம்மா உஷா, தன் மகன் சரியான நேரத்திற்கு செட்டுக்கு வந்து நடித்துக் கொடுப்பார் என்று வாக்குறுதி அளித்தார்.

சிம்பு பழைய மாதிரி வம்பு பண்ண ஆரம்பித்துவிட்டார் என்று பேச்சு கிளம்பியுள்ள நேரத்தில் மஹா படத்தின் இயக்குநர் ஜமீல் போட்ட ட்வீட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. உங்களுடன் வேலை செய்தது சிறப்பான அனுபவம் தலைவா என்று கூறி சிம்புவை பாராட்டியுள்ளார் ஜமீல்.

ஹன்சிகா வித்தியாசமாக நடித்துள்ள மகா படத்தில் அவருக்கு காதலராக நடித்துள்ளார் சிம்பு. அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு நடந்து கொண்ட விதம் படக்குழுவை நெகிழ வைத்துவிட்டது. நேரத்திற்கு வந்து நச்சென்று நடித்துக் கொடுத்துள்ளார்.

சிம்புவை பாராட்டிய ஜமீல் இன்று மீண்டும் மஹா செட்டில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் சீக்கிரம் அப்டேட் விடுங்க பாஸ் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சிம்பு என்றால் இயக்குநர்களை கதறிவிடுபவர் என்று யார் சொன்னது, ஜமீல் ட்வீட்டை பாருங்க என்று எஸ்.டி.ஆர். ரசிகர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!