அவர்கள் முன் நடிக்கும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன் – ஷாருக்கான்

ஷாருக்கான் தனது நடிப்புலக வாழ்க்கை பற்றி ஒரு நிகழ்ச்சியில், அவர்கள் முன் நடிக்கும் போது மிகவும் பதட்டம் அடைந்தேன் என்று கூறியிருக்கிறார்.

ஷாருக்கான் தனது நடிப்புலக வாழ்க்கை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது:-

‘நீங்கள் ஒரு காட்சியில் நடித்து பின், அதிலுள்ள நெகட்டிவ் மட்டும் உங்களுக்குத் தெரியும். அப்போது, உங்களுக்குள் முழுமையான எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.

நானா படேகர், அம்ரிதா சிங், ஜூஹி சாவ்லா போன்ற நடிகர்கள் முன் நடிக்கும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன். படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்ததும், `என்னால் நடிகனாக முடியாது’ என்று தோன்றியது. படத்தின் இயக்குநர் என்னை சமாதானப்படுத்தினார். படத்தின் இறுதி வடிவம் நன்றாக இருக்கும் என்று ஆறுதல் கூறினார்.

அஜய் பிஜிலி, `திரையரங்குகளில் வரவேற்பு பெறும்‘ என்றார். அவர்கள் இருவரும் என்னிடம் பொய் சொன்னார்கள். நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. வழக்கம்போலத்தான் இருந்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. காரணம் மக்கள் என் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர். என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை. சில நேரங்களில் நான் ஒரு நடிகனாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். இது சுவாரஸ்யமானதல்ல. ஆனால், என்னுடைய பணியை நான் விரும்புகிறேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!