நீங்கள் ஏன் விஜய்யை வெறுக்கிறீர்கள்?: தளபதி ரசிகருக்கு எஸ்.ஆர். பிரபு பலே பதில்

கைதி படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபுவை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் விளாசியுள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படமும், கார்த்தியின் கைதியும் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது.

கைதி படத்தின் புகைப்படங்களை பார்த்தால் கார்த்திக்கு இது நிச்சயம் பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் இரண்டு படங்களும் வெற்றி பெற வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் கத்தி, பிகில் குறித்து ட்வீட் செய்திருந்தார். அதை பார்த்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இந்த தீபாவளிக்கு இரண்டு படங்களும் நல்ல விருந்தாக இருக்கும் என்று கமெண்ட் போட்டார்.

பிரபுவின் கமெண்ட்டை பார்த்த விஜய் ரசிகர் ஒருவரோ, நீங்கள் ஏன் விஜய்யை வெறுக்கிறீர்கள், ஏன் அவர் பெயரை டேமேஜ் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு விஜய் ரசிகரும் பிரபு செய்வது சரியில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு பிரபு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் அனைத்து படங்களும் நல்ல வசூல் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் திட்டி போஸ்ட் போட்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கும் இது போன்ற முகம் தெரியாதவர்களை கண்டுகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பிரபுவின் கமெண்ட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை விளாசியுள்ளனர். வேண்டும் என்றே விஜய்க்கு போட்டியாக கைதி படத்தை ரிலீஸ் செய்கிறீர்கள். தேவையில்லாத பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது நீங்கள் தான் என்று கூறியுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!