அசுரன் படம் பார்த்துவிட்டு, சிம்புவை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்

தனுஷின் அசுரன் படத்திற்கு சினிமாத்துறை மட்டுமின்றி அரசியல்வாதிகள் சிலரும் பெரிய அளவில் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அசுரன் படத்தை பார்த்து சிம்பு மீது தான் கோபம் வந்தது என கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பதாக கூறிய மாநாடு படத்தின் ஷூட்டிங் துவங்காமலேயே படம் ட்ராப் ஆனது. அந்த படத்தை தயாரிக்கவிருந்தது சுரேஷ் காமாட்சி தான்.

“அசுரன் படம் பார்த்தேன். தனுஷின் அர்ப்பணிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. எனக்கு சிம்பு மேல் கோபம்தான் வருகிறது. இவ்வளவு திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்துகிடப்பதை பார்த்து கோபம்தான் வருகிறது” என ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!