துணிவு படம் பார்க்க அனுமதிக்காததால் அஜித் ரசிகர் தற்கொலை

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த வீரபாகு என்பவர் தீவிர அஜீத் ரசிகராக இருந்து வந்ததுள்ளார். தனது குடும்பத்தினருடன் போல்டன்புரத்தில் உள்ள கே.எஸ்.பி.எஸ். தியேட்டருக்கு, துணிவு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்த பவுன்சர்கள், வீரபாகுவை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்ததுடன், குடும்பத்தினர் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குடும்பத்தினரை மட்டும் அனுமதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வீரபாகு, அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்து, விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!