அருவம் – விமர்சனம்

நடிகர் சித்தார்த்
நடிகை கேத்தரின் திரேசா
இயக்குனர் சாய் சேகர்
இசை தமன்
ஓளிப்பதிவு ஏகாம்பரம்

நாயகன் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கிறார். உணவில் கலப்படம் செய்பவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார். மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கிறார் சித்தார்த். அதே ஊரியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் நாயகி கேத்ரின் தெரசா. இவருக்கு நுகர்வு சக்தி கிடையாது. இதனால், ஒரு விபத்தில் தாய் இழக்கிறார். சமூக சேவையும் செய்து வரும் கேத்ரின் தெரசாவை சித்தார்த் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், வேலையில் மும்முரமாக இருக்கும் சித்தார்த்தின் செயலால், உணவில் கலப்படம் செய்யும் கபீர் சிங், மதுசூதனன், கந்தகுமார், சில்வா அகியோர் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களால் நாயகன் சித்தார்த் கொல்லப்படுகிறார். இறந்த சித்தார்த், காதலி கேத்ரின் தெரசா மூலமாக பழி வாங்குகிறார்.

ஒரு எறும்பு கூட கொல்ல கூடாது என்று குறிக்கோளுடன் இருக்கும் கேத்ரின் தெரசா, வில்லன்களை எப்படி பழி வாங்கினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நேர்மையான கண்டிப்புடன் செயல்படும் அதிகாரியாக நடிப்பில் பளிச்சிடுகிறார். இறந்த பிறகு ஆவியாக வந்து ஸ்கோர் செய்ய முடியவில்லை.

நாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா முதல் பாதியில் சமூக சேவகியாக மனதில் பதிகிறார். ஆனால், பிற்பாதியில் வில்லன்களை கதாபாத்திரம் அவருக்கு செட் ஆகவில்லை. காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் சதீஷ். குறைந்தளவே பேசி ரசிக்க வைத்திருக்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கபீர் சிங். மதுசூதனன், கந்தகுமார், சில்வா, ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

ரொம்ப பழைய கதையை தூசி தட்டி படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சாய் சேகர். படத்தை முழுவதும் பார்க்க ரொம்ப பொறுமை வேண்டும். உணவில் கலப்படம் செய்வது மிகப்பெரிய தவறு என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். சிகரெட் பிடிப்பது கேடு என்று சொல்வதை போல, உணவில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால், நாளடையில் பிஸ்கெட் சாப்பிட்டால் கேடு, அரிசி சாப்பிட்டால் கேடு என்ற நிலைமைக்கு சென்று விடுவோம் என்பதை சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். இந்த கருத்துக்கு சித்தார்த் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

தமன் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவில் ஏகாம்பரம் கவனிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘அருவம்’ சுவாரஸ்யம் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!