என்னது சிம்பு மீது புகார் கொடுத்தேனா? ஞானவேல்ராஜா விளக்கம்!

சிம்பு மீது புகார் கொடுத்ததாக வெளியான செய்தி குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்து வரும் ‘மப்டி’ என்னும் கன்னட படத்தின் ரீமேக் கைவிடப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது. சிம்பு சரியாக படத்தின் படப்பிடிப்பிற்கு வரவில்லை என்றும், அதனால் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நஷ்டம் ஏற்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததாகக் கூறப்பட்டது.

இதனால் நேற்று முதல் சிம்பு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் இந்த செய்தியை ஞானவேல்ராஜா முற்றிலும் மறுத்துள்ளார். ஏற்கனவே மப்டி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாம். மேலும் யாரோ திட்டமிட்டே இது போன்ற வதந்தியைப் பரப்பியுள்ளனர் என்று ஞானவேல் ராஜா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதன் முலம் பரவி வரும் வதந்திக்கு ஞானவேல் ராஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கன்னடா படமான மப்டி ரீமேக்கில் ஸ்ரீ முரளி நடித்த கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக்கும், ஷிவ ராஜ்குமார் கதாபாத்திரத்தில் சிம்புவும் நடித்து வருகின்றனர்.

இந்த வருடம் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படம் தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு சிம்பு நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. ஏற்கனவே சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் படப்பிடிப்புக்குச் சிம்பு வரவில்லை என்று சிம்புவை படத்திலிருந்து தயாரிப்பாளர் நீக்கினார். இதனால் ‘மகா மாநாடு’ என்ற படத்தைத் தானே தயாரித்து இயக்கி, நடிக்கப் போவதாக அறிவித்தார் சிம்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!