மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் ஷோபனா

தமிழ், மலையாள சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்த ஷோபனா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தமிழ், மலையாள சினிமாவில் மிக சிறந்த நடிகைகள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தவர் ஷோபனா. இயல்பிலேயே நடனம் கற்றவர் என்பதால் தனது முகபாவத்தில், கண்கள் அசைவில் கூட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அப்படிப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி, தனது நாட்டிய பள்ளியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார் ஷோபனா. இவர் நடிக்கும் படத்தை துல்கர் சல்மான், தயாரிப்பதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியுடன் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷோபனா இணைந்து நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக சந்திரமுகியில் பிரபு ஜோதிகா கதாபாத்திரங்களை அதன் ஒரிஜினலான மணிச்சித்ரதாழ் படத்தில் நடித்தவர்கள் இந்த ஜோடி தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!