அக்னி சிறகுகள் படத்திலிருந்து நீக்கப்பட்ட மீரா மிதுன்!

அக்னி சிறகுகள் படத்தில் இருந்து மீரா மிதுன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டில் கடைசி ஆளாக நுழைந்தவர் மீரா மிதுன். கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே இவரால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதனால் மக்கள் மத்தியில் வெறுப்பு சந்தித்து வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்பு வெளியே வந்த இவர், ஜோ மைக்கிலை கொலை செய்ய திட்டம் திட்டிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் சமீபத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருப்பதாகக் கூறினார்.

ஆனால் படத்தில் இருந்து தான் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சன் பிக்ஸர்ஸ், பாண்டி ராஜ், சிவகார்த்திகேயன் தான் என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார் மீரா மிதுன்.

இந்த நிலையில் தற்போது மீரா மிதுன், மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பதிவில், ‘எனக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. நான் அதனை அமைதியாகச் செய்து வருகிறேன். தமிழனுக்கு தமிழ்நாட்டு’ல வாழ வழி இல்லாம பண்றது இங்க தான் நடக்கும். அது தான் எனக்கு ரொம்ப பரிதாபமா இருக்கு’ என்று பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!