பிக் பாஸ் 3யின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

பிக் பாஸ் மூன்றாவது சீசன்னின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. தற்போது ஷெரீன், லோஸ்லியா, முகென், சாண்டி ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் டைட்டிலை வெல்லப் போவது யார்? என்பது தான் ரசிகர்களின் தற்போதைய மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த கேள்விக்கு நாளை இரவு முடிவு தெரிந்துவிடும் என்றாலும், விஜய் டிவி இன்றே வெற்றியாளரை யார் என்பதைத் தேர்வு செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதில் முகென் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரசிகர்களின் வாக்குகள் மற்றும் டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டது, வீட்டில் எந்த விதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தியதால் தான் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், இதுவே நாளைய முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை லோஸ்லியாவும், மூன்றாவது இடத்தில் சாண்டியும், நான்காவது இடத்தை ஷெரின்னும் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிக் பாஸ் மூன்றாவது சீசன், கடந்த இரண்டு சீசன்களை விட வழக்கத்திற்கு மாறாக இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டை என்ற ஒரு விஷயம் மட்டுமே வீட்டை சுற்றி வந்ததாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். அது மட்டுமின்றி சரவணன், தர்ஷன் வெளியேற்றம் என்று எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக் பாஸ் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!