சேரனின் வெளியேற்றம் குறித்து மறைமுகமாக கஸ்தூரி பதிவிட்ட ட்வீட் – என்ன சொல்றாங்க பாருங்க.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ரெண்டே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்.

மேலும் கடந்த வார எவிக்ஷனில் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு எதிர்மறையான ஒன்றாகவே கூறப்பட்டு வருகிறது.
இரண்டாவது சீசனில் அநியாயமாக சென்றாயனை வெளியேற்றியது போல இந்த சீசனில் சேரனை வெளியேற்றி விட்டதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கஸ்தூரி வழக்கம் போல வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார். அந்த டீவீட்டில் சே.. ஏமாற்றம் என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/KasthuriShankar/status/1175842505411022848

இது அவர் சேரனின் வெளியேற்றத்தை பற்றிய ட்வீட் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கவினின் ரசிகர்கள் என்னமோ இரண்டு வாரத்தில் வெளியே வந்துடுவார்னு சொல்லிட்டு வந்தீங்களா என்னாச்சு என கேட்டு வருகின்றனர்.

வெளிப்படையா ட்வீட் போட பயப்படுறீங்களா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.