பயங்கர கோபத்துடன், உதைத்து தள்ளிவிட்டு மதிக்காமல் சென்ற ஷெரின்.! கவின்தான் காரணமா?

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இன்னும்இறுதி கட்டத்திற்கு இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். மேலும் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்துடனும், முழுமூச்சுடனும் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற டாஸ்கில் லாஸ்லியாவிற்கு அடிபட்டநிலையில் கவின் அவரிடம் அதுகுறித்து விசாரித்துள்ளார். மேலும் அதனால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஷெரின் கவினிடம் வாக்குவாதம் செய்கிறார். பின்னர் கோபமாக வாளியில் இருந்த பந்துகளை உதைத்து தள்ளிவிட்டு உள்ளே செல்கிறார். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.