தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவரது மகள்களில் ஒருவர் சவுந்தர்யா. இவருக்கு திருமணமாகி விவகாரத்து ஆகி விட்டது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.
இதையடுத்து தனக்கு பிடித்தமான மணமகனை மீண்டும் தேர்வு செய்தார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் விசாகனை திருமணம் செய்து கொண்டார். தயாரிப்பாளர், இயக்குநராக இருக்கும் சவுந்தர்யா, தற்போது பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரியஸாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சவுந்தர்யா எப்போதும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர். அதில் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.
அந்த வகையில் தந்தை ரஜினி மற்றும் மகன் வேத் ஆகியோர் ஸ்டைலான புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இது பெரிதாக வைரலானது. இதனைத் தொடர்ந்து மகன் வேத்திற்கு நீசல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொடுப்பது போன்ற புகைப்படத்தை சவுந்தர்யா பதிவிட்டார்.
தமிழ்நாடு கடும் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து கொண்டிருக்கும் சூழலில், இப்படி நீச்சல் குளத்தை ஆட்டம் வேண்டுமா? என்ற வகையில், பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் இருந்து சவுந்தர்யா நீக்கிவிட்டார்.
Removed the pictures shared in good spirit from my #TravelDiaries considering the sensitivity around the current #WaterScarcity we are facing 🙏🏻. The throwback pics were to emphasise the importance for physical activities for children from a young age only 🙂🙏🏻 #LetsSaveWater
— soundarya rajnikanth (@soundaryaarajni) June 30, 2019
அதில், குழந்தைகள் இளம் வயதில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தவே, அந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தேன். தண்ணீர் பிரச்சனையில் நாம் சிக்கி தவித்து வரும் நிலையில், மேலும் சர்ச்சையை ஏற்படாத வண்ணம் அவற்றை நீக்கிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.