அந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்-பிடிவாதம் பிடிக்கும் நயன்தாரா

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் .கேரளாவில் இருந்து இறக்குமதியான நடிகைகளில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நயன்தாரா தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் .மேலும் தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் தமிழ்மொழி மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் .இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

தற்போது இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,நடிகர் ஜெயம்ரவி, அரவிந்தசாமி போன்ற பல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றனர் .மேலும் இத்திரைப்படத்தில் நயன்தாராவும் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது மேலும் இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருக்கிறார் .தற்போது நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதனால் தற்போது நடிகை நயன்தாரா இந்த திரைப்படத்தில் இருந்து விலகுவதாக சூசகமாக அறிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.