சின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான, ‘பந்தயம்’ படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் என்.எஸ்.கே.ரம்யா. இதை தொடர்ந்து, வேட்டைக்காரன், யான், பிரியாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

https://www.instagram.com/p/B2d3etPF_Kn/?utm_source=ig_embed

ஏற்கனவே திருமணமான என்.எஸ்.கே ரம்யா, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து தற்போது, சின்னத்திரையில் கதாநாயகனாக நடித்து வரும் சத்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடைய திருமணத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.