சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக விமர்சித்த பிரபல நடிகர்..!! எதற்காக தெரியுமா..?


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்கள் போரட்டம் நடத்தினர். 100வது நாளன்று 144 தடை உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றனா். அப்போது போராட்டக்காரா்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சுடு நடத்தினர், இந்த துப்பாக்கிச்சூட்டில் 13பேர் பரிதாபமாக உயிரிந்தனர்.

இந்நிலையில்துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மக்களை, நடிகர் ரஜினிகாந்த நேற்று நேரில் சந்தித்தார். அப்போது துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினிகாந்தை பார்த்து நீங்கள் யார் என்று கேட்டார் .இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.


அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்’போரட்டம் போராட்டம் என்றுபோயிக்கொண்டிருந்தால் தமிழ்நாடே சுடுகாடாக மாறும்என்று ஆவேசமாக பேசினார். மேலும் இந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு சமூகவிரோதிகள்தான் காரணம் என்று கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது ’இப்போது கலவரம் செய்தது சமூக விரோதிகள் என்று கூறுவார்கள். அதன்பிறகு தூத்துக்குடியை மாசுப்படுத்தியதும் சமூக விரோதுகள்தான் என்று கூறுவார்கள் என்று டுவிட் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!