நயன்தாராவை பார்த்து இப்படி சொல்லிட்டாரே விக்னேஷ்சிவன்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும், நயன்தாராநானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமானார்.இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த தகவலை இதுவரை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இல்லை.

இருவருமே தங்கள் பிறந்தநாள் மற்றும் முக்கிய விசேஷங்களுக்கு செல்ஃபி எடுத்தும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இதையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நயன்தாராவிற்கு சிறந்த நடிகை, பேவரைட் நடிகை என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில், ”பிளாக் அன்ட் வைட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுமே” என நயன்தாரா படத்தை பதிவிட்டு டுவீட் செய்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!