திருமணம் முடித்த பிறகு கவர்ச்சியா ஆடக்கூடாதா..? பிரபல நடிகை ஆவேசம்..!!


இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், சிவா, திஷா பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் படம் 2.0. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியானது. இதில், இதற்கு முன்னதாக வந்த மாஸ் ஹீரோக்களின் படங்களையும், அரசியல் பிரமுகர்களையும் கலாய்க்கும் விதமாக காட்சிகள் ஒவ்வொன்றும் இடம்பெற்றிருந்தது. இப்படத்தில் அரசியல் பற்றியு, சமூக பிரச்சனை குறித்தும் கருத்து தெரிவித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி நடனமும் இடம்பெற்றுள்ளது. இதனைக் கொண்டு ரசிகர் ஒருவர் கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், தாயான பிறகு கவர்ச்சி நடனம் ஆடுவது சரியா என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கஸ்தூரி கூறுகையில், இது போன்ற மன நிலையை தான் மாற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். கவர்ச்சியாக இருக்கும் பென் அறிவுடையவளாக இருக்க மாட்டாள். அவள் தாய்மைக்கு தகுந்தவள் அல்ல. எப்போதும், நன்மதிப்புகளை பெற்றிருக்க மாட்டாள் என்று வரைமுறை வகுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதாவது, ஏதாவது ஒரு ஹீரோவைப் பாத்து ஏன் மது போதையில் இருக்கிறது மாதிரி நடிக்கிறீர்கள், ஏன் கவர்ச்சியான பாடல்களுக்கு டான்ஸ் ஆடுறீங்க, ஏன் காதல் காட்சிகளில் நடிக்கிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறோமா? என்று பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!