வைரலாகி வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மலையாள டுவீட்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் ஆங்கிலத்தில் டுவீட்டுக்களை பதிவு செய்தாலும் அவ்வப்போது தமிழிலும் அவர் டுவீட் பதிவு செய்வதுண்டு. அந்த வகையில் தற்போது அவர் மலையாளத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள மலையாள மக்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் மலையாளிகள் இன்று ஓணம் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு ஓணம் வாழ்த்து கூறும் வகையில் தனது வாழ்த்துக்களை ஏ.ஆர்.ரஹ்மான் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் பதிவு செய்து ஒருசில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் லைக்ஸ்கள் குவிந்து வருவதோடு வைரலாகியும் வருகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ‘பிகில்’, ‘சிவகார்த்திகேயன் 14’, ‘விக்ரம் 58’, ‘தலைவன் இருக்கின்றான்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.