விஜய் டிவி ஏமாற்றிய சரவணனுக்கு அடித்த மிகப் பெரிய லக் – கொண்டாடும் ரசிகர்கள்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சரவணன்.

தான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றதாக கூறி அதற்காக மன்னிப்பும் கேட்டார்.

ஆனால் திடீரென விஜய் டிவி இதனை காரணம் காட்டி அவரை மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற்றியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியால் ஏமாற்றப்பட்ட சரவணனுக்கு மிக பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது ஒவ்வொருவரிடமும் நேரடி தமிழ் படங்களை தேர்ந்தெடுத்து அந்த படக்குழுவை ஊக்குவிக்கும் வகையில் ரூ 75 லட்சம் மானியம் கொடுக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இந்த குழுவில் ஒருவராக சரவணன் இடம் பெற்றுள்ளார்.

இதை தான் சரவணனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.