ராஜா ராணி புகழ் நடிகை ஷப்னதிற்கு திருமணம் முடிந்து விட்டதா! மாப்பிள்ளை யார் தெரியுமா – புகைப்படம் இதோ

இன்று வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையையும் ரசிகர்கள் கொண்ட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரது மனதையும் கவர்ந்த ராஜா ராணி, தெய்வ மகள் போன்ற தொடர்களில் நடித்தவர் நடிகை ஷப்னம்.

இவர் தனது தூரத்து உறவினரான ஆர்யன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது நிச்சயத்தார்தம் நடைப்பெற்றது. மேலும் 2018,பிப்ரவரி 14 திருமணம் நடைபெறும் என கூறப்பட்டு ஆனால் நடைபெற வில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளிவர தொடங்கியது. இந்நிலையில் திடீரென இவர்களது திருமணம் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்று விட்டது. திருமணம் முடிந்த அடுத்த நாள் அதாவது நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற்றது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.