என்னைச் சந்தேகப்பட்டார் அமலாபால்: ஆடை பட இயக்குநர் வாக்குமூலம்!

மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆடை படத்தில், அமலா பால் மிக தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தில் விவேக் பிரசன்னா, ரம்யா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீஸரில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்புக்கு ஆளானது.

படம் மிகவிரைவில் வெளிவரவிருக்கிறது. இப்படம் பற்றி பேசிய இயக்குநர் ரத்னகுமார் இப்படம் கண்டிப்பாக பெண் முன்னேற்றத்தையோ, பெண் உரிமையோ பேசும் படமாக இருக்காது. இது ஒரு திரில்லர் படம். அந்த அனுபவத்தை இந்தப்படம் தரும் என்றார். மேயாத மான் படத்தில் நிறைய பிரச்சனைகள் இருந்தது. சிலர் அந்தப்படத்தை பல முறை பார்த்ததாக சொன்னார்கள். சிலர் 10 நிமிடம் கூட பார்க்க முடியவில்லை என்றார்கள். இந்தப் படத்திற்கு அது நேராது என நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்ததை பற்றி மட்டுமே தான் அனைவரும் கேட்கிறார்கள். நிர்வாணமாக நடிப்பது மட்டும் தான் துணிச்சலா எங்கிறார்கள். அப்படியில்லை அமலாபால் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார். 10 வயது சிறுமிக்கு அம்மா வேடமேற்றிருக்கிறார். அவர் கதைக்கு தேவையென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்.

அமலா பால் போன்ற நடிகை கிடைத்தது எங்களுக்கு வரம். நான் முதன் முதலில் அமலா பாலிடம் கதை சொன்னபோது கதை பிடித்திருக்கிறது சொல்கிறேன் என சொல்லி அனுப்பி விட்டார்.பின்பு என்னை சந்தித்தபோது ஆள் ஒரு மாதிரியாக இருக்கிறாரே… கதை இவரோடது தானா? என சந்தேகப்பட்டு என் மேனேஜரை விசாரிக்க சொன்னேன் என சொல்லிச் சிரித்தார். ஆனால் ஷீட்டிங்க் வந்த பின் எங்களை முழுமையாக நம்பினார் என்றார். அவரைத் தவிர யாரும் இந்த படத்தை செய்ய முடியாத அளவு நடிப்பை தந்துள்ளார்.

இந்தப்படம் A சான்றிதழ் பெற்ற படம். வயது வந்த பெரியவர்கள் இப்படத்தை புரிந்து கொள்வார்கள். நல்ல்தொரு திர்ல்லர் படத்தை குழுவாக உருவாக்கியிருக்கிறோம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.